இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டங்களின் போது மியான்மர் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 38 பேரைக் கொலை செய்ததாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் உள்ள பல நகரங்களில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் தினமும் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் முயன்று வருவதால் 126 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை தன்னிச்சை மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளினால் உயிரிழந்துள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் உறுதிபடுத்தியுள்ளது.
நேற்யை தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் யாங்கோனின் ஹ்லிங்தயா நகரத்தில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஹிலிங்தாயா மற்றும் அண்டை நகரான ஸ்வேபிதர் பகுதிகளில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து திங்களன்று நகரத்தில் மேலும் நான்கு நகரங்களும் இராணுவ சட்டம் அறிவிக்கப்பட்டன.
இந்த சட்ம், யாங்கோன் பிராந்திய கட்டளையின் தளபதியான இராணுவத்தை, நகரங்களில் அனைத்து நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களையும் பயன்படுத்த அனுமதிக்கிறது, இது வரும் நாட்களில் எதிர்ப்பாளர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை முன்னெடுக்கும்.
ஹிலிங்தாயாவில் அமைந்துள்ள சீனாவுடன் இணைக்கப்பட்ட தொழிற்சாலைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டு, தீ விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர் என்று மியான்மரில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மியான்மரின் இராணுவ அரசாங்கத்துடன் சீனா ஒரு நட்பு ரீதியான உறவினை முன்னெடுத்துள்ளமையினால் இந்த தொழிற்சாலைகள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
யாங்கோனுக்கு வடகிழக்கில் உள்ள பாகோவில் ஒரு பொலிஸ் அதிகாரி இறந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்ததாக இராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு தொலைக்காட்சியில் அறிவித்தது.
இதனிடையே இந்த வன்முறையை உடனடியாக நிறுத்தவும், மியான்மர் மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இராணுவம், ஆட்சி அதிகாரத்தை திருப்பித் தரவும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் என மியான்மருக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஒரு அறிக்கையில் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM