(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் பொதுஜன பெரமுன பிரதான கட்சியாகவுள்ளது. இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கூட்டணியாகவே போட்டியிட தீர்மானித்துள்ளோம்.
மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சுதந்தி கட்சியினர் தனித்து செல்ல முன் உள்ளுராட்சி மன்ற பெறுபேற்றை மீட்டிபார்க்க வேண்டும் என மனை பொருளாதார, நுண்நிதி,சிறு கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாகாண சபை தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களின் ஜனநாயக உரிமையை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. மாகாண சபை தேர்தல் இதுவரை காலமும் பிற்போடப்பட்டுள்ளமைக்கு எதிர்க்கட்சியினரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் பொறுப்பு கூற வேண்டும். கூட்டணியாகவே மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.இத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே அதிக மாகாண சபைகளை கைப்பற்றும்.
கூட்டணியில் இருந்துக் கொண்டு சுதந்திர கட்சியினர் குறிப்பிடும் கருத்துக்கள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளன.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பிறகே இவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள்.
குண்டுத்தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என எதிர்க்கட்சியினராக செயற்பட்ட காலத்தில் இருந்து குறிப்பிடுகிறோம். கூட்டணியமைத்து ஆட்சியமைத்துள்ளதால் உண்மையை பொய்யென குறிப்பிட முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படாது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.சுதந்திர கட்சியினர் தனித்து செல்ல முன் 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கிடைக்கப்பெற்ற பெறுபேற்றை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM