கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வைத்து வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல்கள் மற்றும் மேலும் பல கடத்தல்கள் குறித்த விசாரணைகளின் பிரதான சாட்சியாளராக கருதப்படும் லெப்டினன் கொமாண்டர் கே.பி. வெலகெதர
தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளார். இது குறித்து வெலகெதரவின் பெற்றோர் ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வாவுக்கும் அறிவிக்கப்பட்டும் அவ்வச்சுறுத்தல் தொடர்வதாக கடற்படை தலைமையகத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அறிவிக்காமல் அவுஸ்திரேலியா சென்றதாக கூறி கடற்படையின் இராணுவ நீதிமன்றம் வெலகெதரவுக்கு அவரது சிரேஷ்டத்துவத்தை நான்கு வருடங்களால் குறைத்து தீர்ப்பறிவித்தது. எனினும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அத்தீர்ப்பில் கையெழுத்திடாது அத்தண்டனையை ரத்து செய்தார். அத்துடன் சாட்சிகள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெலகெதரவுக்கு பாதுகாப்பளிக்கவும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தனிப்பட்ட ரீதியாக லெப்டினன் கொமாண்டர் வெல்கெதரவுக்கு பாதுகாப்பளிக்க விடுக்கப்பட்ட உத்தரவானது நேற்று வரை செயற்படுத்தப்படாமை காரணமாக அவருக்கு இந்த உயிர் அச்சுறுத்தல் தொடர்கின்றது.
கடந்த 2008.09.17 அன்று இரவு தெஹிவளை, பெர்னாண்டோ மாவத்தையில் வைத்து ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்களும், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கனகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேர் கடத்தப்பட்டிருந்தனர்.
இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைய குறித்த பிரிவின் பொறுப்பதிகாரி நிஸாந்த டீ சில்வா தலைமையிலான விசாரணைக் குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதில் இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கொழும்பு சைத்திய வீதியில் உள்ள புட்டு பம்பு எனும் ரகசிய தடுப்பு இடத்திலும் திருகோணமலை கடற்படை தளத்தின் கன்சைட் எனும் இரகசிய நிலத்தடி சிறைக் கூடத்திலும் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமைக்கான அறிகுறிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் கன்சைட் நிலத்தடி இரகசிய முகாம் அருகே சேவையாற்றிய லெப்டினன் கொமாண்டர் வெலகெதர புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலம் விசாரணையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந் நிலையிலேயே அவருக்கு எதிரான உயிர் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. அவரது சாட்சி ஆவணங்கள் அடங்கிய அலுமாரியும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஆவணங்கள் கடற்படைக்குள்ளேயே கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந் நிலையில் லெப்டினன் கொமாண்டர் சி.கே.வெல்கெதர என்ற சாட்சியாளரின் பாதுகாப்பு குறித்து கேசரி கடற்படையின் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவியிடம் வினவியபோது,
இதற்கு பதிலளித்த கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி,
கொமாண்டர் சி.கே.வெல்கெதர வின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவில்லை. அவர் கடற்படை முகாமுக்குள்ளேயே இருப்பதால் அவரை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. என்றார்.
இதன்போது கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் அண்மையில் சி.ஐ.டி. முன்வைத்த அறிக்கையில் வெல்கெதரவுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்பட்டுள்ளதே என கேட்டபோது
இதற்கு பதிலளித்த அவர், கெப்டன் வெல்கெதரவுக்கு சுதந்திரமாக செயற்பட முடியும். அவருக்கு அச்சுறுத்தல்கள் ஏதும் இருப்பின் அவர் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் வழக்கு கூட தாக்கல் செய்ய முடியும். அவர் சாட்சியாளராக செயற்பட அவருக்கு பூரண உரிமை உள்ளது. தற்போதைக்கு அவர் முகாமுக்குள் இருப்பதால் அவருக்கு அது பாதுகாப்பனதே. என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM