கொள்ளுபிட்டி சந்தை வளாக அபிவிருத்தி திட்டம் பிரதமர் முன்னிலையில் வெளியீடு

Published By: J.G.Stephan

14 Mar, 2021 | 05:36 PM
image

கொள்ளுபிட்டி சந்தை வளாக அபிவிருத்தி தொடர்பான உத்தேச திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் ( 2021.03.12 ) பிற்பகல் அலரி மாளிகையில் வெளியிடப்பட்டது.

தற்போது கொள்ளுபிட்டிய சந்தை அமைந்துள்ள இடத்தில் 39 மாடியிலான புதிய சந்தையுடன் கூடிய குடியிருப்பு கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகள் முழுமையாக சந்தை தொகுதிக்காக  ஒதுக்கப்படும். எட்டாவது மாடியில் இருந்து மேல்நோக்கி இரண்டு கோபுரங்களில் கட்டப்படும் 30 மாடிகள் சொகுசு குடியிருப்பு கட்டிடங்களை கொண்டதாக அமையும். புதிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் சில மாம்பழங்கள், பழங்கள் அல்லது காய்கறிகளை விற்க விரும்பும் எவருக்கும் இடம் உண்டா என்று பிரதமர் வினவினார்.

பழங்கள் மற்றும் காய்கறிகளின் விற்பனைக்கு  இங்கு ஒரு சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார். அதற்கமைய, சாதாரண வர்த்தகர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு புதிய சந்தை வளாகத்தில் நிச்சயமாக இடம் ஒதுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

இப்புதிய சந்தை வளாகத்தை  சுற்றுலா தலமாகவும், உள்ளூர் உணவு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

தற்போது 30-40 வாகனங்கள் மாத்திரமே இங்கு நிறுத்தக்கூடியதாக உள்ள போதிலும், இந்த உத்தேச திட்டத்தின் ஊடாக 348 வாகனங்களை நிறுத்தக்கூடிய வகையிலான வாகன நிறுத்தமொன்று நிர்மாணிக்கப்படும்.

கொள்ளுபிட்டிய சந்தை வளாக அபிவிருத்தி திட்டம் குறித்து டிசைன் ஒன் முகாமைத்துவ பணிப்பாளர் சிரேஷ்ட கட்டிடக் கலைஞர் தனஞ்சன அமரசேகர விளக்கினார்.

கொழும்பு மாநகர சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து, உத்தேச திட்டம் ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மூன்று ஆண்டுகளில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படும் புதிய திட்டத்திற்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அடிக்கல் நாட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை, கொழும்பு மாநகரசபை, மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகியன இணைந்ததாக இப்புதிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27