வயோதிபர் ஒருவர் யானை தாக்கி பலி

Published By: Digital Desk 3

13 Mar, 2021 | 05:30 PM
image

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில்  நேற்று (12.03.2021) மதியம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பலியாகியுள்ளார்.

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியானவர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நருவிலிக்குளம் கிராமத்தைச்  சேர்ந்த என்.எம்.ஆபிரகாம் (வயது-69) என தெரியவந்துள்ளது.

தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் நேற்று  வெள்ளிக்கிழமை மதியம் மூவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது திடீர் என அப்பகுதிக்கு வந்த யானை குறித்த மூவரையும் துரத்தியுள்ளது.

இதன் போது இருவர் தப்பிச் சென்ற நிலையில் குறித்த வயோதிபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இலுப்பைக்கடவை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டதோடு, மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04