மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் நேற்று (12.03.2021) மதியம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பலியாகியுள்ளார்.
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியானவர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நருவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த என்.எம்.ஆபிரகாம் (வயது-69) என தெரியவந்துள்ளது.
தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் மூவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது திடீர் என அப்பகுதிக்கு வந்த யானை குறித்த மூவரையும் துரத்தியுள்ளது.
இதன் போது இருவர் தப்பிச் சென்ற நிலையில் குறித்த வயோதிபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இலுப்பைக்கடவை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டதோடு, மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM