விசேட விருந்துபசார வைபவம் ஒன்றில் உணவு ஒவ்வாததன் காரணமாக பொகவந்தலாவ தெரேசியா மோரா தோட்டத்தில் 10 வயது சிறுமி உட்பட 13 பேர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொகவந்தலாவை தெரேசியா தோட்ட மோரா பிரிவில் நேற்று இரவு இடம்பெற்ற விருந்துபசார வீடு ஒன்றில் கலந்து கொண்ட அத்தோட்டத்தின் மக்களில் 10 வயது சிறுமி அடங்களாக 7 ஆண்களும், 6 பெண்களும் உணவு உட்கொண்டுள்ளனர்.
இதன்போது வழங்கப்பட்ட உணவு ஒவ்வாததன் காரணமாக வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஏற்பட்டதன் காரணமாக இன்று காலை பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM