இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு செல்லத் தயாரான 24 பேரை கற்பிட்டி கடற்படையினர் நேற்று (11.03.2021) கைது செய்தனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கற்பிட்டி பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கற்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் கற்பிட்டி களப்புக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை சோதனை செய்த கடற்படையினர், குறித்த லொறிக்குள் இருந்த சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த லொறி சாரதியுடன் குழந்தைகள் உட்பட 24 பேர் இலங்கையிலிருந்து வேறொரு நாட்டிற்குச் செல்ல தயாராக இருந்ததுடன், கற்பிட்டி களப்பு பகுதியில் இருந்து ஒரு படகு வரும் வரை அவர்கள் காத்திருந்ததாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் 20 ஆண்கள், ஒரு பெண் (01), இரண்டு பெண் குழந்தைகள் (02) மற்றும் ஒரு சிறுவன் (01) அடங்குவர் என்றும் இவர்களில் 09 பேர் மட்டக்களப்பு பகுதியிலும், 6 பேர் யாழ்ப்பாணம் பகுதியிலும், 05 பேர் முல்லைத்தீவு பகுதியிலும், 03 பேர் திருகோணமலை பகுதியிலும், லொறியின் சாரதி புத்தளம் பகுதியிலும் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்கள் மறைந்திருந்த லொறியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM