மக்களால் புறக்கணிக்கப்படுவீர்கள் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் அத்துரலியே ரத்ன தேரர்

Published By: Digital Desk 3

12 Mar, 2021 | 10:38 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுபல சேனா அமைப்பை தடை செய்ய சிங்கள பௌத்த மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு குறிப்பாக சிங்கள பௌத்த மகக்ளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டும்.அதனை விடுத்து  தேவையற்ற விடயங்களில் அவதானம் செலுத்தினால் மக்களால் புறக்கணிக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

களனி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற மத நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை  குறுகிய காலத்தில் தண்டிப்பதாக குறிப்பிட்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. முஸ்லிம் விவாக சட்டம் நீக்கம், மத்ரஸா பாடசாலை  நீக்கம் ஆகிய விடயங்கள் குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு குறிப்பாக பௌத்த சிங்கள மகக்ளுக்கு வாக்குறுதி வழங்கியது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பலமான தலைமைத்தவத்தின் கீழ் அரசாங்கத்தை தோற்றுவிக்கவேண்டும் என தீர்மானித்து நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள். பௌத்த சிங்கள மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதா என்பது தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை தேர்தல் பிரசாரமாக்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கும்,குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என குறிப்பிடுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகமாகவே கருதப்படும்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தோற்றம் பெற பொதுபல சேனா அமைப்பு காரணம் ஆகையால் அவ்வமைப்பை தடை செய்ய வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதாகும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் பௌத்த அமைப்புக்கள் பொது தன்மையில் எதிர்ப்பை வெளிப்படுத்த நேரிட்டிருக்காது. பொதுபல சேனா அமைப்பின் காரணமாகவே மறைமுகமாக செயற்பட்ட  இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பல விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. ஆகவே பௌத்த அமைப்புக்கள் ஒருபோதும் பிற இனங்கள் மீது அடிப்படைவாதத்தையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்து விடவில்லை.

பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய பௌத்த சிங்கள மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும்.ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கை வேறும் வாய்சொல்லாக மாத்திரம் காணப்படுகிறது. தேவையற்ற விடயங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கினால் நாட்டு மக்கள் அரசாங்கத்தை முழுமையாக புறக்கணிப்பார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02