கொள்ளுபிடிய ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட 4 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை பாணந்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் மீதே இவ்வாறு கற்கள் எறிந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
பம்பலப்பிடிய மற்றும் கொள்ளுபிடிய பிரசேதங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இளைஞர்களே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
அண்மையில், வடக்கு நோக்கிய சென்ற ரயில் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கல் தாக்குதலில் அநுராதபுரத்தை சேர்ந்த உதவி கல்வி பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து ரயில்கள் மீது கல் தாக்குதல் நடத்தும் நபர்களை கைதுசெய்வதற்காக நேற்று முதல் காவலர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM