சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்த நால்வர் கைது

Published By: Digital Desk 4

12 Mar, 2021 | 06:33 AM
image

(செ.தேன்மொழி)

பாணந்துறை - பொல்கொட பகுதியில் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்டப்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

பாணந்துறை - பொல்கொட பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு அண்மித்த பகுதியில் வியாழக்கிழமை (11-03-2021 ) பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 8 எரிவாயு சிலிண்டர்களும் , 45 மதுபான போத்தல்களும் , 59 கோடாக்களும் (பீப்பாய்களும் ) கைப்பற்றப்பட்டுள்ளன. பொல்கொட குளத்தை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு சட்டவிரோதமாக  பல மதுபான உற்பத்தி நிலையங்கள் இயங்கிவருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , அது தொடர்பில் வலானை ஊழல் தடுப்பு பிரிவினர் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38