வெளிநாடுகளில் சிக்கியுள்ள எம்மவர்களை  அழைத்துவரும் பொறுப்பை எதிர்க்கட்சியிடம் கையளியுங்கள்  - ஹரின் பெர்னாண்டோ

Published By: Digital Desk 3

11 Mar, 2021 | 05:28 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கத்துக்கு முடியாவிட்டால் அந்த பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பல வேலைத்திட்டங்களை ஆரம்பத்திலிருந்து நாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். எனினும் அவை தொடர்பில் இது வரையில் எவ்வித அவதானமும் செலுத்தப்படவில்லை.

இவ்வாறு இலங்கையர்களை அழைத்து வருவதற்கான நிதியை சேகரித்து விமானங்களை ஏற்பாடு செய்து எம்மால் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். எனினும் எதிர்கட்சியாக இருந்து கொண்டு தூதரகங்களுடன் எம்மால் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது.

மாறாக தூதரகங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சகல இலங்கையர்களால் நாம் நாட்டுக்கு அழைத்து வந்தாலும் , பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் சிக்கல் ஏற்படும். இது தொடர்பில் அரசாங்கம் எம்முடன் கலந்தாலோசித்தால் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சியடைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு - ஹைட்பார்க்கில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு கட்சி பேதமின்றி சகலரும் எம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38