(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ள இலங்கையர்களை தாயகம் அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கைகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச எடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொழில் நிமித்தமாக சென்ற இலங்கையர்கள், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தாய் நாட்டுக்கு வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்களை இழந்துள்ளதுடன், பல்வேறுபட்ட நோய்த்தாக்கம் உள்ளிட்ட வெவ்வேறு விதமான பிரச்சினைகளால் தாயகம் திரும்ப முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்குக்கான விஜயத்தின் ஓர் அங்கமாகவே, அமைச்சர் நாமல் ராஜபக்ச இலங்கை தூதரகத்தில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்களை சந்தித்திருந்தார்.
இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் தாய் நாட்டுக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்கான விமானப்பயணச்சீட்டுக்களை அமைச்சர் நாமல் ராஜபக்ச வழங்கியிருந்ததுடன், அதற்கான நடவடிக்கைகளை சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM