இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

Published By: Digital Desk 4

11 Mar, 2021 | 07:07 AM
image

(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய நியமனங்கள் வெளியாகின | Virakesari.lk

இதுகுறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்த தற்போதைய நிலைவரம் தொடர்பில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை விரிவாக ஆராய்ந்தோம்.

இந்தப் பயங்கரவாதத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம்.

அதன்படி ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்களையும், பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளையும் பெரிதும் வரவேற்கின்றோம். 

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் உரிய நேரத்தில் தமது கடமைகளைச் செய்வதற்குத் தவறியவர்கள் என்று பெயரிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமும் சுதந்திரமும் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகின்றோம். அதனைச் செய்வதற்கான நீதிப்பொறிமுறை உடனடியாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இதுவிடயத்தில் மிகமுக்கியமான 22 ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம்.

அவை வெகுவிரைவில் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான விரைவானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான நீதிப்பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58