குழு மோதலில் குடும்பஸ்தரொருவர் பலி: புத்தளத்தில் சம்பவம்..!

Published By: J.G.Stephan

10 Mar, 2021 | 02:50 PM
image

புத்தளம் கடையாக்குளம் பிரதேசத்தில் நேற்று (09.03.2020) இரவு 9.30 மணியளவில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தள பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புறா வளர்ப்பில் ஏற்பட்ட பழைய பிரச்சினையே கொலையில் முடிவடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர், சம்பவம் இடம்பெற்ற செவ்வாய்க்கிழமை (09.03.2021) இரவு கடையாக்குளம் பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வருகை தந்த போது, அங்கு வந்த சிலர் புறா வளர்ப்பில் ஏற்பட்ட பழைய பிரச்சினைகளை முன்வைத்து குறித்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு குழு மோதல் ஏற்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சந்தேக நபர்கள் மேலும் இருவரை காயப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், புத்தளம் தலைமையகப் பொலிஸாரும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24