கேபிட்டலைச் சூழ தேசிய காவலர்களின் இருப்பை விரிவாக்க பென்டகன் ஒப்புதல்

Published By: Vishnu

10 Mar, 2021 | 08:16 AM
image

அமெரிக்க கேபிட்டலை இன்னும் இரண்டு மாதங்கள் பாதுகாக்க உதவும் வகையில் வொஷிங்டனில் சுமார் 2,300 தேசிய காவல்படையினரை வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பென்டகன் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த எண்ணிக்கையானது தற்சமயம் கேபிட்டலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள 5,200 தேசிய காவல்படையினரின் எண்ணிக்கையில் அரை சதவீதமாகும்.

"கோரிக்கையின் முழுமையான மறுஆய்வுக்குப் பிறகு, தயார்நிலைக்கு அதன் சாத்தியமான தாக்கத்தை நெருக்கமாக பரிசீலித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று பென்டகன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களால் அமெரிக்க காங்கிரஸின் இருக்கை மீது ஜனவரி 6 தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து, தேசிய காவல்படை வீரர்கள் கேபிட்டல் வளாகத்திற்கு அனுப்பப்பட்டு, பாதுகாப்பு சுற்றளவு நீட்டிக்க உயரமான வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 6 தாக்குதலில் 300 க்கும் மேற்பட்டோர் மீது மத்திய அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர், இந்த கலவரம் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து மரணங்களுக்கு வழிவகுத்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08