நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லட்சுமி தோட்டம் கிழ் பிரிவில் நிறுத்தி வைக்கபட்டிருந்த லொறிக்கு இனந் தெறியாதவர்களினால் தீ வைக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 12மணியளவில் இடம் பெற்றதாக லொறியின் உரிமையாளர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
குறித்த தோட்டத்தில் நிறுத்தி வைக்கபட்ட லொறிக்கு தீ வைத்த சந்தேக நபர்கள் தப்பி சென்று விட்டதாகவும் முறைபாட்டில் தெரிவிக்கபட்டுள்ளது.
எனவே குறித்த தோட்டத்தில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்ரசின் தோட்ட தலைவரை தாக்கியவர்களின் லொறியே இவ்வாறு தீ வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தோட்ட தொழிற்சங்க தலைவரை தாக்கிய குடும்பத்தினரை தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு கோறி நேற்று தோட்டமக்கள் தொழிலுக்கு செல்லாது பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
தீ வைக்கபட்ட லொறி பகுதியளவில் தீகிரை ஆகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதோடு சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM