(எம்.மனோசித்ரா)
மண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித தடைகளும் இன்றி விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமைச்சரவையின் ஆலோசனைக்கமைய கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி மண்ணெண்ணெய் மானியத்தை பூர்த்தி செய்தல் மற்றும் மசகு எண்ணெய் தொடர்பான துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று திங்கட்கிழமை முதன்முறையாகக் கூடியது.
இதன் போதே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மண்ணெண்ணெய் மானியத்தினை எவ்வித முறைகேடுகளும் இன்றி விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் , அதற்குரிய வழிமுறைகளை தயாரிக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச வங்கிகளில் டொலர்களில் கடன் பெற்றுக் கொள்வதற்கு பதிலாக ரூபாய்களில் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச வங்கிகள் மற்றும் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதில் அமைச்சர்களான உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெரும, டக்ளஸ் தேவானந்தா, பிரசன்ன ரணதுங்க , இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM