தலைமுறை சமத்துவத்தை வலியுறுத்தும் சர்வதேச பெண்கள் தினம் 

Published By: Digital Desk 2

08 Mar, 2021 | 04:37 PM
image

பெண்களின்  தேசம் என்று கூறுமளவுக்கு இன்று உலகம் முழுக்க பல துறைகளில் பெண்கள் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் சாதனைகளை நினைவுகூருவதற்கும் அடுத்த பெண் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையிலும் ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

  சுமார் 230 வருடங்களுக்கு முன்பு பிரஞ்சுப் புரட்சி காலகட்டத்தில், தமக்குரிய உரிமைகளை கேட்டு பாரிஸ் நகர வீதிகளில் பெண்கள் அணிதிரண்ட வரலாறே பின்பு சர்வதேச பெண்கள் தினமாக பரிணமித்தது. இதன் தொடர்ச்சியான போராட்டங்களின் பிரதிபலிப்பாக  பிரான்ஸில் 1848 ஆம் ஆண்டு   பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட தினமான மார்ச் 8 ஆம் திகதியை, சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்க பின்னாட்களில் முடிவு செய்யப்பட்டது. 

 ஐக்கிய நாடுகள் சபையானது ஒவ்வொரு வருடமும் தனது அங்கத்துவ நாடுகளிடையே பெண்கள் தொடர்பான நலன்களை மேம்படுத்தும் திட்டங்களை அமுல்படுத்தும்படி கோரிக்கை விடுத்து வருவதுடன் பிரதான தொனிப்பொருளுக்கமைவாக அந்த வருடம் முழுதும் செயற்பாடுகளை முன்னெடுக்க வலியுறுத்துகின்றது. 

இவ்வருடத்தின் தொனிப்பொருளாக‘ தலைமைத்துவத்திலுள்ள பெண்கள்: கொவிட்- 19 உலகில் சமத்துவமான எதிர்காலத்தை அடைதல் ”என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வருட ஆரம்பத்தில் உருவான கொரோனா தொற்று முழு உலகையும் ஆக்கிரமித்திருந்த நேரத்தில், பெண்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது, சிறுமிகள் மற்றும் குடும்பப்பெண்களின் அர்ப்பணிப்பு , பெண்களை  தலைவர்களாகக் கொண்ட நாடுகளில் இத்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கொண்டாடும் ஒரு அம்சமாகவே இந்த தொனிப்பொருள் விளங்குகிறது.

  

எனினும் எல்லாத்துறைகளிலும் பெண்களுக்கு பாலின சமத்துவம் கிடைத்து விட்டதாக எண்ணி விட முடியாது. இது குறித்து ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் அன்டனியோ கட்டாரஸ் பெண்கள் தொடர்பான தனது அறிக்கையில் சில விடயங்களை  தெளிவுபடுத்தியுள்ளார்.  

பொது வாழ்க்கை குறித்து முடிவெடுப்பதிலும் பெண்கள் மிகவும் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் 22 நாடுகளில் மட்டுமே பெண்களின் தலைமைத்துவம் உள்ளது. தேசிய பாராளுமன்றங்களில்  பெண்களின் சதவீதம் 24.9 மட்டுமே. அரசியலில் இவ்வாறு காட்டப்படும் புறக்கணிப்பு  இதே ரீதியில் முன்னெடுக்கப்பட்டால்,  ஆண்களுக்கு நிகரான சமத்துவம் உருவாக 130 ஆண்டுகள் தேவைப்படும் என அவர் சுட்டிக்காட்டுகிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49