நாளை மறுதினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்

Published By: Vishnu

08 Mar, 2021 | 12:47 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பற்றிய விவாதத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 04 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

அதன்படி, ஏதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சபை ஒத்திவைப்பு பிரேரணையாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். 

மார்ச் 09 ஆம் திகதி (நாளை) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் ஆரம்பமாகும் அதேவேளை, முற்பகல் 10.00 மணிமுதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்படும். 

அதனை அடுத்து, கடந்த அமர்வில் ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதியும் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள் பற்றியும் மு.ப. 11.00 முதல் பி.ப. 3.30 மணி வரை விவாதம் நடாத்த பாராளுமன்ற அலுவல்கள்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தீர்மானித்ததாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்துள்ள பிரேரணையும் சபையில் சமர்பிக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

பாராளுமன்றம் மார்ச் 09 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன அவர்கள் முன்வைக்கும் பெண்களின் உரிமை மீறல்கள் மற்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த விவாதம் பிற்பகல் 3.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை இடம்பெறும். 

மார்ச் 10 ஆம் திகதி புதன்கிழமை, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான அவகாசம் இம்முறை இல்லை எனினும், முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து, ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

மார்ச் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெறமாட்டாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59