“பலஸ்தீனம் பற்றிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு”
ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு விவஸ்தை கிடையாது. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கேட்டு எல்லா கதவுகளையும் தட்டுவது அவற்றின் பழக்கம்.
எந்தக் கதவு திறக்கும்; எந்தக் கதவின் ஊடாக சென்றால் நீதிகிட்டும்; எந்தக் கதவைத் தட்டினால் தாம் விரட்டி அடிக்கப்படுவோம்; என்றெல்லாம் தர்க்க ரீதியாக ஆராயும் பக்குவத்தை அவை இழந்திருக்கின்றன.
உலகின் மேற்கு மூலையில் இருந்து கிழக்கு மூலை வரை எங்கும் ஏற்றத்தாழ்வுகள்.
நலிந்தவர்கள் மீதான சுரண்டல்கள். அதிகாரம் படைத்ததரப்புக்கள் கட்டவிழ்த்து விடும் கொடுமைகள்.
இந்தக் கொடுமைகளுக்கு இன்று இனச் சுத்திகரிப்பு, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் என்ற ரீதியில் புதிய வரைவிலக்கணங்கள் மொழியப்படுவதையும் பார்க்கிறோம்.
ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நடத்திய அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஆப்கானிஸ்தானிலும் லிபியாவிலும் நேட்டோகட்ட விழ்த்துவிட்ட கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆபிரிக்க ஆயுத நெருக்கடிகளில் சிக்கி உறவுகளையும், உடமைகளையும் உறுப்புக்களையும் இழந்தவர்கள் என்ற ரீதியில் சகல தரப்பினரும் உள்ளனர். பலஸ்தீனர்களையும், இலங்கையர்களையும் மறக்க முடியாது.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர், ஒவ்வொருவரும் இன, மத, குல, பால் ரீதியாக ஒதுக்கப்படாமல் கௌரவமான பிரஜையாக, தனக்கு உரித்தான சுதந்திரங்களுடன் சிறப்பாக வாழ்வதை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான பஞ்சாயத்து என்ற எண்ணம் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.
ஆனால், ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளின் கைப்பாவையாக மாறியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை என்ற கட்டமைப்பில், மேற்குலக சமூகம் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திலுள்ள நீதி தேவதையின் தராசுத் தட்டுக்களைக் கண்ணுக்குத் தெரியாத நூலால் மிகவும் சூசகமான முறையில் தமது பக்கம் தாழச் செய்யும்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-07#page-12
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM