(செ.தேன்மொழி)
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3,250 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறுமணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,307 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 3,250 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களின் போது ஒன்று கூடல்கள் , விருந்துபசாரங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM