மட்டக்களப்பில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் வாகனங்களுடன் கைது

Published By: Digital Desk 4

05 Mar, 2021 | 09:48 PM
image

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று வாகனங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த கப்புகாமியின் ஆலோசனைக்கமைய பொலிஸ் உத்தியோகத்தர்களால்  இன்று வெள்ளிக்கிழமை (05 ) பிற்பகல் அரசடிச்சேனை, பாம்பர்சேனை பகுதியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பெக்கோ கனரக வாகனம் ஒன்றும்  மண் ஏற்றிய நிலையில் இரண்டு உழவு இயந்திரங்களும், அதிலிருந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதிப்பத்திரம் இல்லாமல் மண் அகழ்வில் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரையும்  குறித்த வாகனங்களையும் நாளை சனிக்கிழமை ( 06) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த கப்புகாமி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44