அரசாங்கத்தினால் அமைக்கபடவுள்ள காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம் ஊடாக நாட்டில் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார்.
விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் கூச்சலிடுகின்றார்கள் என்பதற்காக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கின்ற உரிமையை யாரும் மறுக்க முடியாது என்றும் டிலான் பெரெரா குறிப்பிட்டார்.
காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் டிலான் பெரெரா இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்
காணாமல் போனோர் குறித்த ஆராய்வதற்கான நிரந்தர அலவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதாவது அரசாங்கத்தினால் அமைக்கபடவுள்ள காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம் ஊடாக நாட்டில் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் கூச்சலிடுகின்றார்கள் என்பதற்காக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கின்ற உரிமையை யாரும் மறுக்க முடியாது. விமல்வீரவன்சவும் உதய கம்பன்பிலவும் கூச்சலிடலாம். ஆனால் மக்களுக்கு தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற விடயம் கூறப்பட வேண்டும்.
இதேவேளை இவ்வாறு ஒரு சட்டமூலம் எமது நாட்டில் நிறைவேற்றப்பட்டமை வரவேற்க்கத்தக்க விடயமாகும். காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படுவதில் தாமதிக்கக்கூடாது. இனவாதிகள் கத்துகின்றனர் என்பதற்காக இவற்றை செய்யாமல் இருக்க முடியாது. இனி இந்த நாட்டில் இனவாதிகளுக்கு இடமில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM