(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய வர்த்தமானி அறிவிப்பு வெளிவந்தும் அது தொடர்பான வழிகாட்டலை இதுவரை வெளியிடாமல் காலம் தாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தேவையற்ற பிச்சினைகள் தலைதூக்குவதற்கு முன்னர் விரைவாக சுகாதார வழிகாட்டலை வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் செயலாளரும் வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான ஜீ. வீரசிங்க தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்து இருந்து வந்தோம். என்றாலும் காலம் கடந்தாலும் தற்போதாவது அடக்கம் செய்ய அனுமதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
இருந்தபோதும் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு தேவையான சுகாதார வழிகாட்டலை சுகாதார அமைச்சு இன்னும் வெளியிடமால் இருப்பது கவலையளிக்கின்றது. வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும்போது அதுதொடர்பான சுகாதார வழிகாட்டலும் வெளிவந்திருக்கவேண்டும். அதனால் தொடர்ந்து இதனை தாமதிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய தேவையான சுகாதார வழிகாட்டல்களை விரைவாக வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் முறைமையில் சர்வதேச வழிமுறைகளை சுகாதார பிரிவு மீறி செயற்படுகின்றது. கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கான முன்னுரிமை முறையில் சுகாதார பிரிவுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னர் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி வழங்கவேண்டும். கொவிட்டில் மரணிக்கும் அதிகமானவர்கள் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற கணிப்பின் அடிப்படையிலேயே 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதனை வழங்கி மரண வீதத்தை குறைப்பதே இதன் நோக்கமாகும்.
என்றாலும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஒழுங்கில்லாமலே இடம்பெற்று வருகின்றது. அதனால் தடுப்பூசி ஏற்றும் அதிகமான மத்திய நிலையங்களில் மக்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்காக போராடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதனால் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் கண்மூடித்தனமாக இருக்கமால் கொவிட் தடுப்பூசியை மக்கள் இலகுவான முறையில் பெற்றுக்கொள்ளக்கூடிய முறைமை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM