வெறுக்கத்தக்க வகையில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்  சிலரின் பேச்சு - பொதுஜன பெரமுன

Published By: Gayathri

02 Mar, 2021 | 02:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் சுதந்திர கட்சி புறக்கணிக்கப்படுவதாக  அக்கட்சியின் சிரேஷ்ட  உறுப்பினர் குறிப்பிடுவது அடிப்படை தன்மையற்றது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான அறிக்கையை கொண்டு சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்களின் பேச்சுக்கள் வெறுக்கத்தக்க வகையில் காணப்படுகிறது.  

கூட்டணியின் சகோதர கட்சி என்ற ரீதியில் கூட்டுப் பொறுப்புடன் இவர்கள் செயற்படவேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் அறிக்கையைகொண்டு சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்களிள் கருத்துக்கள் வெறுப்பூட்டும்  தன்மையில் காணப்படுகிறது.

கூட்டணியின்  சகோதர கட்சி என்ற அடிப்படையில் அனைத்து சகோதர கட்சிகளும் கூட்டு பொறுப்புடன் செயற்படவேண்டும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் சுதந்திர கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குறிப்பிட்டுள்ளமை அடிப்படை தன்மையற்றது. கூட்டணியின் பங்காளி கட்சிகள் அனைவருக்கும் உரிய அந்தஸ்த்து தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் அறிக்கை சுயாதீனமற்றது என ஆணைக்குழுவை ஸ்தாபித்தவர்கள் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது. 

ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளில் அரசியல் அழுத்தங்கள் ஏதும் இடம் பெறவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட முடியும். சுதந்திர கட்சியினர் கூட்டு பொறுப்புடன் செயற்படுவது சிறந்ததாக அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08