நாய் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: J.G.Stephan

27 Feb, 2021 | 06:02 PM
image

(செ.தேன்மொழி)
களுத்துறை பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாயொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். களுத்துறை பகுதியில் நீர்வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்ட நாய் பொது மக்கள் சிலரை கடித்துள்ளதாக களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டுக்கமைய இன்று சனிக்கிழமை காலை முற்பகல் 10.30 மணியளவில் குறித்த நாய் நடமாடிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்ற பொலிஸ் குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நாய் உயிரிழந்துள்ளது.

நாய்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த 60 வயதுடைய நபரொருவரும் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22