(நா.தனுஜா)
கொவிட் - 19 தடுப்பூசியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்துவதால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது. புற்றுநோயாளர்களுக்குத் தடுப்பூசி அவசியமானதுமாகும் என்று இலங்கை புற்றுநோயியல் வைத்திய நிபுணர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.
இக்குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கொவிட் - 19 தடுப்பூசியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்துவதால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என்பதுடன் புற்றுநோயாளர்களுக்குத் தடுப்பூசி அவசியமானதுமாகும்.
எனினும் அதற்கான சிகிச்சையான கீமோதெரபியின் மூலமாக நோயெதிர்ப்புசக்தி உருவாகிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றுவது தவிர்க்கப்பட வேண்டும்.
புற்றுநோயாளர்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும்போது இலங்கை புற்றுநோயியல் வைத்திய நிபுணர்களாலும் உலகளாவிய ரீதியிலுள்ள தலைசிறந்த புற்றுநோய் வைத்தியசாலைகளாலும் முன்மொழியப்பட்டுள்ள வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும்.
அதன்படி புற்றுநோய்க்கான சிகிச்சை முழுமையாகப் பூர்த்தியடைந்தவர்களும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளவர்களும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தடுப்பூசி ஏற்றுவதில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னரும் தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படும் தரப்பினராகவே அவர்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.
கீமோதெரபி சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் அந்த சிகிச்சை பூர்த்தியடைந்ததன் பின்னர் ஒரு மாதகாலத்திற்குத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக்கூடாது.
அதன்பின்னர் அவர்களின் குருதி மாதிரி பரிசோதனையில் அனைத்தும் சாதாரண நிலையில் இருப்பின் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM