யானை - மனித மோதலுக்கு தீர்வுகாண 2 மாதங்களுக்குள் செயற்றிட்டம் – கோபா குழு பரிந்துரை

Published By: Vishnu

25 Feb, 2021 | 12:21 PM
image

இலங்கையில் பாரிய பிரச்சினையாகவுள்ள யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்டமொன்றை தயாரிக்குமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது. 

யானை மனித மோதலுக்குத் தீர்வு காண்பதற்காக அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கலாநிதி பிரித்விராஜ் பெர்னாண்டோ தலைமையிலான விசேட குழுவின் பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை இதுவரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதுடன், இதனைவிட நிபுணத்துவ குழுவினால் 2006 ஆம் ஆண்டு யானை மனிதன் மோதலைத் தீர்ப்பதற்கு தயாரிக்கப்பட்ட தேசிய கொள்கைத் திட்டத்தை ஆராய்ந்து இந்த செயற்றிட்டத்தைத் தயாரிக்குமாறு கோப் குழு தெரிவித்தது.

யானை மனித மோதலால் உலகில் அதிகமான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை காணப்படுவதுடன், அதிகமான மனித உயிர்கள் இழக்கப்படும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் புலப்பட்டது. எனவே, இந்தப் பிரச்சினையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பது பற்றி இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 

இக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான வைத்தியகலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், வைத்தியகலாநிதி உபுல் கலப்பத்தி, வீரசுமன வீரசிங்ஹ, நிரோஷன் பெரேரா, பீ.வை.ஜீ.ரட்ணசேகர ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

அதிமேதகு ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ள குழு அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய வனஜீராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு இது தொடர்பான முழுப் பொறுப்பை வழங்க முடியாது என்றும், இதற்காகப் பொது மக்களின் ஒத்துழைப்பு, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள், கமநல சேவைகள் திணைக்களம், மஹாவலி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மின்சார வேலிகள் அமைக்கப்படுவதுடன் அவை பராமரிக்கப்பட வேண்டும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மக்கள் தாமாகவே முன்வந்து மின்சார வேலிகளை அமைத்தல் மற்றும் விவசாயம் செய்யும் காலங்களில் மாத்திரம் தற்காலிக மின்சார வேலிகளை அமைப்பது போன்ற மாற்று யோசனைகளும் இந்தப் பரிந்துரைகளில் உள்ளடங்கியுள்ளன.

யானைகளை விரட்டுவதற்கு தற்பொழுது பயன்படுத்தப்படும் பாரம்பரிய நடைமுறை 50 வருடத்துக்கு அண்மித்த காலப்பகுதியில் தோல்வியடைந்திருப்பதாக யானை மனிதன் மோதல் தொடர்பில் ஆராய்ச்சி அனுபவம் மிக்க நிபுணரமான கலாநிதி பிரித்விராஜ் பர்னாந்து இங்கு தெரிவித்தார். சமூக பங்களிப்புடன் சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் பங்குதாரர்களின் பங்களிப்பைப் பெற்று வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகள் காணப்படுவதாகவும், இதனை முன்னுதாரணமாகக் கொண்டு அந்தந்தப் பிரதேசங்களுக்குப் பொருந்தும் வகையில் பயன்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

யானைகளுக்கான வேலிகள் அமைத்தல், தொங்கும் வேலிகளை அமைத்தல், யானைகளுக்கு அகழிகள் அமைத்தல், யானைகளை விரட்டுவதற்கான தேனீ வளர்ப்பு போன்ற செயற்றிட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர். வஜனீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 1500 என்பதுடன், இதில் யானைகளுக்கான பாதுகாப்பு வேலிகள் குறித்து செயற்படும் பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் சிறியதாக இருப்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதும் இங்கு புலப்பட்டது.

இதேவேளை, குறிப்பிட்ட சில பிரதேசங்களில் யானைகளுக்கான தடுப்பு வேலிகள் தமது காணிகளின் எல்லைகளாக அமைக்கப்படுவதாகக் கருதி அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பிலும், சில பகுதிகளில் மின்சார வேலிக்கான பற்றரிகள் திருடப்பட்டிருப்பது குறித்து முறைப்பாடுகுள் செய்யப்பட்டுள்ளமை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22