இலங்கை-பாகிஸ்தான் பராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நிமல் சிறிபால டி.சில்வா தெரிவு

Published By: Digital Desk 4

24 Feb, 2021 | 05:32 PM
image

(ஆர்.யசி)

இலங்கை-பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான  ரவூப் ஹக்கீம்,  ஏ.அரவிந்த குமார் மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோர் உப தலைவர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

ரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை தாமதிக்காமல் நீதிமன்றங்களுக்கு வழங்க நடவடிக்கை  மேற்கொள்ளவேண்டும் ;நிமல் சிறிபால டி சில்வா | Virakesari.lk

இலங்கை-பாகிஸ்தான் பராளுமன்ற நட்புறவு சங்கத்தின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே நிறைவேற்றுக் குழு மற்றும் பதவிகளுக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் பாகிஸ்தான் குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் ஹகட்டாக் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

இச்சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர்  ரிஷாட் பதியுதீன் தெரிவுசெய்யப்பட்டதுடன், உதவிச் செயலாளராக  வடிவேல் சுரேசும், பொருளாளராக வீரசுமன வீரசிங்ஹ அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதனைவிடவும், பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், துஷார இந்துனில் அமரசேன, (வைத்தியலாநிதி) சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே,  மேஜர் சுதர்ஷன தெனிபிட்டிய,  அலி சப்ரி ரஹீம், கனஹ ஹேரத், கௌரவ ஜகந் புஷ்பகுமார,  ஜயந்த வீரசிங்ஹ, ஜகத் குமார,  குலசிங்கம் திலீபன், வேலு குமார்,  பைசல் ஹாசிம், அமரகீர்த்தி அதுகோரல, மதுர விதானகே, சாமர சம்பத் தஸநாயக்க,  உதயன கிரிந்திகொட, குணதிலக ராஜபக்ஷ, (வைத்தியகலாநிதி) திலக் ராஜபக்ஷ, ஜே.சி.அலவத்துவல,  ரொஷான் ரணசிங்க ஆகியோர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38