(எம்.மனோசித்ரா)
தனிமைப்படுத்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய இன்று புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தற்போது வரை 3,222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3,150 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
குறிப்பாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கண்காணிப்பினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிறுவனங்களின் நிர்வாகிகள் தனிமைப்படுத்தல் விதிகளை கடைபிடிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM