(எம்.மனோசித்ரா)
கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இது வரையில் 15,000 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நேற்று செவ்வாய்கிழமை மாத்திரம் 2254 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு - நாரஹேன்பிட்டியவிலுள்ள பொலிஸ் வைத்தியசாலை பணியாளர்களுக்கும், குண்டசாலையிலுள்ள பொலிஸ் வைத்தியசாலை பணியாளர்களுக்கும் ஆரம்பகட்டமாக தடுப்பூசி வழங்கப்பட்டது. அதற்கமைய இது வரையில் 15,331 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் வைத்தியசாலைகளிலுள்ள பணியாளர்களுக்கு ஆரம்பக்கட்டமாக தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன், நேரடியாக பொலிஸ் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM