(சசி)
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக திராய்மடு சுவிஸ் கிராம மக்கள் நேற்று இரவு 8 மணியிலிருந்து பெரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதால் அப்பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சுனாமியில் தாய் தந்தையரை இழந்த திராய் மடு சுவிஸ் கிராமத்தில் வசிக்கும் சிறுமியொருவரின் வீட்டுக்கு முன்பாக மது அருந்திக் கொண்டிருந்த நரியென்று அழைக்கப்படும் குணசேனவை அவ்விடத்தை விட்டுச்செல்லுமாறு குறித்த சிறுமியின் சகோதரன் தெரிவித்ததால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நரியால் சகோதரன் தாக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பம் ஒருவாரத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து கோபமடைந்த பிரதேச மக்கள் ஒன்றிணைந்து நரி என்று அழைக்கப்படும் குணசேன மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
வைத்தியசாலையைவிட்டு தப்பிச்சென்ற நரி வீதியால் சென்றவர்களின் கழுத்தில் வாளை வைத்து மிரட்டியுள்ளார். கோபமடைந்த பிரதேச வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து குறித்த சம்பவம் தெடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .
இதையடுத்து சம்பந்தபட்ட நரி என்பவரும் நரியினால் தாக்கப்பட் ட 6 பேரும் விசாரணைகளின் பின் பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்டனர் .
இதையடுத்து சிறிது நேரத்தின் பின் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நரி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த பொது மக்கள் பாதுகாப்பினை வழங்க வேண்டிய பொலிசார் எவ்வாறு குறித்த நபரை தப்பிக்கவிட முடியும் என கோரி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் நேற்று இரவு 8 மணி முதல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த மாகாணசபை உறுப்பினர் இரா .துரைரெட்ணம், இந்திராகுமார், ஆகியோரால் அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுசென்றதையடுத்து, அரசாங்க அதிபர் பொலிஸாரிடம் நிலைமை தொடர்பாக ஆராய உத்தரவிட்டுள்ளார் .
நரியினால் தாக்கப் பட் ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 24 மணி நேரத்துக்குள் நரியை கைது செய்வதாக பொலிஸ் அதிகாரி கீர்த்திரெட்ண தெரிவித்துள்ளார் .
நரி என்பவர் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளவர் என்பது முதல் கட் ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நரி என்ற வர்த்தகர் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதில் பொதுமக்கள் உறுதியாகவுள்ளனர்.
இதேவேளை, குறித்த வர்த்தகரை கைதுசெய்யும் நோக்கில் பெருமளவான பொலிஸார் திராய்மடு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM