(நா.தனுஜா)
நாட்டில் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகவும் சர்வதேச விசாரணையின் ஊடாக இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பலர் கூறுகின்றார்கள்.
உள்ளக பிரச்சினையொன்று தொடர்பில் சர்வதேசத்தை நாடவிருப்பதாகக் கூறுவதன் ஊடாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் அதனையே செய்கின்றார்.
நாட்டின் பிரச்சினைகளை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியமில்லை என்று சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் பெருமளவிற்கு திரிபடைந்திருக்கின்றன என்று கருதுகின்றோம்.
அவ்வறிக்கையின் ஊடாக தேசிய அமைப்புக்களைத் தண்டிக்கும் திட்டமிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் அதனை உடனடியாகக் கைவிடவேண்டும்.
அதுமாத்திரமன்றி இவ்வறிக்கை தயாரிக்கப்பட்ட போது அதில் அரசியல் தலையீடுகள் எவையேனும் காணப்பட்டதா என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்.
இந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்துமாறும், இவ்விடயத்தில் நீதி நிலைநாட்டப்படாவிட்டால் சர்வதேசத்தை நாடவுள்ளதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூறுகின்றார்.
நாட்டில் 30 வருடகாலமாகப் போர் இடம்பெற்றது. அது முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும் இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பலர் கூறுகின்றார்கள்.
தற்போது அதனையே கார்டினலும் செய்ய முற்படுகின்றார். நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லவேண்டிய அவசியமில்லை.
கடந்த காலங்களில் நாம் விழிப்புடன் செயற்பட்ட போதும் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் எச்சரித்த போதும் கார்டினல் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பவர் போன்று செயற்பட்டார்.
நாம் இனங்களுக்கு இடையில் தேவையற்ற பிரச்சினைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கு முற்படுவதாகவும் பலர் கூறினார்கள் என்று சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM