(எம்.மனோசித்ரா)
இலங்கையில் தொரோனா மரணங்களின் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை இரவு 10 மணி வரை 490 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 80 489 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 75 110 பேர் குணமடைந்துள்ளதோடு , 4667 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்று ஞாயிறுக்கிழமை மேலும் 10 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.
கொலன்னாவையை சேர்ந்த 74 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 21 ஆம் திகதி கொவிட் நிமோனியா, ஈரல் நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தையை சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 21 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 16 ஆம் திகதி கொவிட் தொற்றுடன் இரத்தம் நஞ்சானமை , இதய நோய், தீவிர நீரிழிவு நோய் என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண்னொருவர் கடந்த 16 ஆம் திகதி கொவிட் தொற்றுடன் இரத்தம் நஞ்சானமை, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
பிபில பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவர் கண்டி வைத்தியசாலையில் கடந்த 19 ஆம் திகதி மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு, கொவிட் தொற்றால் சுவாச தொகுதியில் ஏற்பட்ட தொற்று நிலையால் உயிரிழந்துள்ளார்.
குருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 20 ஆம் திகதி கொவிட் நிமோனியா, இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் தீவிர நீரிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
புறக்கோட்டையை சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கடந்த 19 ஆம் திகதி மூச்சிழுப்பு , தீவிர நீரழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
குடாகல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய ஆணொருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி கொவிட் தொற்று , இரத்தம் நஞ்சானமை என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய ஆணாருவர் பிம்புர ஆதார வைத்தியசாலையில் கடந்த 20 ஆம் திகதி கொவிட் நிமோனியா நிலையால் உயிரிழந்துள்ளார்.
ஹட்டனை சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கடந்த 20 ஆம் திகதி கொவிட் தொற்று , தீவிர நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM