செய்திப்பிரிவு
பௌத்த தத்துவம் மற்றும் இளைஞர்களிடையே நற்பண்புகளை வளர்ப்பதில் அதன் பங்களிப்பு என்பன தொடர்பான சர்வதேச மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது.
இந்திய கலாசார உறவுகள் பேரவை மற்றும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் அபிவிருத்தி நிறுவனம் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த மேற்படி மாநாடு கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி, 19 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் இணையவழி ஊடாக நடைபெற்றது.
இந்தியாவின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை அமைச்சர் ஸ்ரீ கிரென் ரிஜுவினால் இம்மாநாடு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பௌத்த தத்துவத்தின் முக்கிய கூறுகள், அதன் கலாசாரம் மற்றும் இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் வியாபித்திருக்கும் அந்தத் தத்துவத்தின் பண்புகள் தொடர்பில் ஆராய்தல் மற்றும் அவற்றை பல்வேறு பகுதிகளுக்கும் விஸ்தரித்தல் ஆகியவற்றை நோக்காகக்கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட 29 நாடுகளைச் சேர்ந்த வளவாளர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டதுடன் இதன்போது பௌத்தமதம் பற்றிய பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM