க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ஜூன் மாதம்

Published By: Vishnu

22 Feb, 2021 | 03:03 PM
image

மார்ச் 1 முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் முடிவுகள் ஜூன் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (22) பத்தரமுல்ல, நெலும் மவத்தையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 622,305 மாணவர்கள், 4,513 பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதவுள்ளனர்.

423,746 பாடசாலை மாணவர்களும், 198,606 தனியார் பரீட்சார்த்திகளும் இவ்வாறு பரீட்சை எழுதவுள்ளனர்.

கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு சிறப்பு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிராந்திய சுகாதார அலுவலர்களுடன் கலந்தாலோசித்து மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33