ரஷ்யாவின் சமராவில் உள்ள நகர மருத்துவமனையின் மருத்துவர்கள் பல வாரங்களுக்கு முன்னர் கொவிட்-19 உடன் அனுமதிக்கப்பட்ட 100 ஆவயது நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்ததாக அந் நாட்டு சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அதன்படி கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 100 வயதான மூதாட்டி, சமாராவின் நகர மருத்துவமனையில் உள்ள தொற்று வார்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவர் பல வாரங்களாக தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வந்தார் மற்றும் முழு குணமடைந்த பின்னர் இவ்வாறு வைத்தியசாலையை விட்டு வெளியேற்றப்பட்டார்.
மருத்துவமனை மருத்துவர்கள் வீட்டிலேயே அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, கொவிட்-19 தொற்றினால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 10 சதவீதம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். வயதானவர்கள் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் மிகவும் கடுமையான நிகழ்வுகளைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
சமராவின் நகர மருத்துவமனையில் தொற்று நோயியல் பிரிவு கடந்த ஆண்டு ஒக்டோபரில் திறக்கப்பட்டது, அன்றிலிருந்து 1,200 க்கும் மேற்பட்ட கொவிட்-19 நோயாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.
தொற்றுநோய்களின் போது, சமாரா பிராந்தியத்தில் மொத்தம் 46,276 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 42,533 பேர் குணமாகியுள்ளதுடன், 900 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM