அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாமலேயே பெருந்தோட்ட கம்பனிகள் 19.02.2021 அன்று சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் அட்டனில் இன்று (20.02.2021)இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சம்பள பேச்சுவார்த்தையை இழத்தடிப்பு செய்யும் நோக்கில் கம்பனிகள் இவ்வாறு செயற்படகூடும். அதாவது பேச்சுவார்த்தையை இழுத்தடிக்க கம்பனிகள் இவ்வாறு சூட்சமமான வேலைகளில் ஈடுபடுகின்றன. அதாவது அரசாங்கத்தின் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இவ்வாறு 1000 கொடுப்பதை தவிர்க்க இவ்வாறு செயற்படலாம். பெருந்தோட்டங்களை இந்தியாவின் அதானி கம்பனிக்கு விற்பது என்பது வெறும் கட்டுக்கதையாகவே நான் கருதுகின்றேன். நான் அரசாங்கத்துடன் இணைவதாக கூறுவோர் அது தொடர்பான பேச்சுவார்த்தை எப்போது என கூறினால் அதற்கு பதிலளிப்பேன்.
20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தொடர்பிலும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இங்கு கருத்து தெரிவித்தார்.
“அரவிந்த குமார் தொடர்பில் மக்களின் தீர்மானத்திற்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்படும். நாம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், இந்தியாவை பகைத்துக் கொண்டு ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது ஆபத்தானது. ஆகவே நண்பனை பகைத்துக்கொண்டு செயற்படுவதை மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM