சர்வதேச நாடுகளை பகைத்துக் கொள்ளாமல் அரசாங்கம் செயற்பட வேண்டும்: பேராசிரியர் திஸ்ஸ விதாரன

Published By: J.G.Stephan

20 Feb, 2021 | 12:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)
இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் உரிய பொறிமுறைகளை வகுக்க வேண்டும். புதிய அரசியலமைப்பில் நல்லிணக்கம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதை உத்தேச புதிய அரசியலமைப்பு நிபுணர் குழுவிடம் தெரிவித்துள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விவகாரத்தில் அரசாங்கம் சர்வதேச நாடுகளை  பகைத்துக் கொள்ளாமல் நாட்டின் இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது, நாட்டில் அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் எவ்வாறு மாற்றமடைகிறதோ, அவ்வாறே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் காலத்திற்கு காலம் மாற்றமடைகிறது. நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் தேசிய நல்லிணக்கம் குறித்து உரிய கவனம் செலுத்தியுள்ளன.

அத்தோடு, தேசிய நல்லிணக்கம் குறித்து தற்போது மாறுப்பட்ட பல கருத்துக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஒரு தரப்பினரது வெறுக்கத்தக்க பேச்சுக்களும், நடத்தைகளும் இனங்களுக்கிடையில்  தற்போது முரண்பாட்டை  தோற்றுவித்து நல்லிணக்கத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

தேசிய நல்லிணக்கத்தை உறுதியாக செயற்படுத்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் ஊடாக சிறந்த பொறிமுறையினை வகுக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். தேசிய நல்லிணக்கத்தை தவிர்த்து ஒருபோதும் முன்னேற முடியாது. சர்வதேசமும் இன நல்லிணக்கத்தையே அங்கிகரிக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27