(எம்.எப்.எம்.பஸீர்)
மரணமடைந்த பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட இளைஞருக்கு, மீள பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கக் கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்தமையை ஆட்சேபித்து இன்று (19.02.2021) உயர் நீதிமன்றில் சிறப்பு மேன் முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்ன கொரயா ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் , இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் தீர்ப்பறிவித்திருந்த நிலையில், மீள பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிடுமாறு இந்த சிறப்பு மேன் முறையீட்டில் கோரப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உறுதி செய்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM