(நா.தனுஜா)
அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக வெட்டப்பட வேண்டிய நிலையிலிருந்த உலகிலேயே மிகவும் அருகிவரும் மரத்தை பாதுகாப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் அருகிவரும் இந்த மரம் முதன்முதலில் 1868 ஆம் ஆண்டில் அடையாளங்காணப்பட்டதுடன் 1911 ஆம் ஆண்டில் பின்னர் அது எங்கும் கண்டறியப்படவில்லை.
இந்தத் தாவரம் முழுமையாக அழிந்துவிட்டதாக கடந்த 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டில் கொழும்பில் இதனையொத்த மரமொன்று இனங்காணப்பட்டது.
எனினும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளுக்காக அந்த மரம் வெட்டப்பட இருந்த நிலையில், நாட்டிலுள்ள சூழலியலாளர்களும் அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
அதனைத்தொடர்ந்து அந்த மரம் வெட்டப்படாது என்றும் நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் அதனூடாக முன்னெடுக்கப்படும் என்றும் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM