வத்தளையில் விபத்தில் சிக்கி ஆசிரியை பரிதாபமாக பலி

Published By: Digital Desk 2

18 Feb, 2021 | 05:34 PM
image

(செ.தேன்மொழி)

வத்தளை - ஏகித்த சந்தியில் பாதையை கடக்க முற்பட்ட ஆசிரியை ஒருவர் பாரவூர்தியில் மோதி உயிரிழந்துள்ளார்.

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏகித்த சந்தியில் இன்று  வியாழக்கிழமை முற்பகல் 9.50 மணியளவில் பாதயை கடக்க முற்பட்ட பெண்ணொருவரின் மீது பாரவூர்தியொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

வத்தளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சசிகலா ஜெகதீஸ்வரன் என்ற  இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதன்போது, படுகாமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 10 நிமிடங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை பொலிஸார் விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதியை கைது செய்துள்ளனர். சந்தேக நபரான சாரதியை நாளை  வெள்ளிக்கிழமை வெலிசர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41