(எம்.மனோசித்ரா)
பேலியகொடை - புதிய நுகேபார பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18 கிராம் ஹெரோயினுடன் 39 வயதுடைய பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு , கொம்பனித்தெரு - வேகந்த பகுதியைச் சேர்ந்தவராவார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
குறித்த பெண் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
நேற்று புதன்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடைய 60 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாரால் தொடர்ச்சியாக சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் பற்றி அறிந்துள்ள பொது மக்கள் 118, 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM