இந்த மாத சதித்திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பல அரசாங்க அலுவலகங்களை முடக்கி, வேலைநிறுத்தங்களை ஊக்குவித்ததற்காக மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு, ஆறு பிரபலங்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதுடன் இதுவரை சுமார் 500 பேரை கைதுசெய்தும் உள்ளது.
புதன்கிழமை பிற்பகுதியில், மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர், அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக ரயில்களை நிறுத்திய ரயில்வே தொழிலாளர்களை எதிர்கொண்டனர்.
இதன்போது ஒருவர் காயமடைந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
பெப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டங்களின் விளைவாக புதன்கிழமை தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மார் முழுவதும் நூறாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர்.
போராட்டத்தில் சேர அரசு ஊழியர்களை ஊக்குவித்தமைக்காக திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ஒரு பாடகர் உட்பட ஆறு உள்ளூர் பிரபலங்கள் தூண்டுதல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் புதன்கிழமை தாமதமாக அறிவித்தது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மியன்மாரின் ரயில் சேவைகள் புதன்கிழமை மோசமாக பாதிக்கப்பட்டன. இரண்டாவது பெரிய நகரமான மணடலேயில் பாதுகாப்புப் படையினர் வேலைநிறுத்தம் செய்யும் ரயில்வே தொழிலாளர்களை எதிர்கொண்டதுடன், இப்பர் தோட்டாக்கள் மற்றும் கவண் கொண்டு துப்பாக்கிச் சூடு மற்றும் கற்களை வீசினர் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
இறப்பர் தோட்ட சூட்டுக்குள்ளாகி ஒரு தொண்டு தொழிலாளி காயமடைந்தார்.
இராணுவம் அல்லது காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை, ஆனால் இராணுவத்தின் பேஸ்புக் பக்கம் "மக்களுக்கு அமைதியை உறுதிசெய்ய" நாடு முழுவதும் படைகள் பாதுகாப்பு அளித்து வருவதாகக் கூறியது.
ஆட்சி கவிழ்ப்பு ஜனநாயகத்தை நோக்கிய தற்காலிக மாற்றத்தை நிறுத்தியதிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டவர்களின் எண்ணிக்கை புதன்கிழமைக்குள் 495 ஐ எட்டியுள்ளது என்று மியான்மரின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு போராட்டத்தில் ஏற்பட்ட காயங்களால் ஒரு பொலிஸ்காரர் இறந்ததாக இராணுவம் கூறுகிறது. அதேநேரம் தலைநகர் நெய்பிடாவில் நடந்த போராட்டத்தின் போது தலையில் சுட்டுக் காயங்களுக்குள்ளான ஒரு எதிர்ப்பாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2020 நவம்பர் 8 தேர்தலில் சூ கியின் தேசிய ஜனநாயகக் கட்சி கட்சியால் கைப்பற்றப்பட்ட மோசடி குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்ததைத் தொடர்ந்து பெப்ரவரி 01 இராணுவம் ஆட்சியைப் பிடித்தது, இது மேற்கத்திய நாடுகளிடமிருந்தும் உள்ளூர் எதிர்ப்புகளிடமிருந்தும் கோபத்தைத் தூண்டியது.
ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூகி, இப்போது ஒரு இயற்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டையும், ஆறு வாக்கி டாக்கி ரேடியோக்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டையும் எதிர்கொள்கிறார். அவரது அடுத்த நீதிமன்ற ஆஜரானது மார்ச் 1 ஆம் திகதி ஆகும்.
75 வயதான சூகி, ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM