(எம்.மனோசித்ரா)
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று புதன்கிழமை முதல் கொரானோ தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் காலை 8.30 முதல் 12 மணிவரை தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய இன்றைய தினம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளார். மேலும் இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க, ஜயந்த சமரவீர, டி.வி.சானக மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க , வீரசுமன வீரசிங்க, குணதிலக ராஜபக்ஷ, சந்திம வீரக்கொடி, ரஞ்சித் பண்டார மற்றும் குமார வெல்கம ஆகியோரும் இன்று தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளனர்.
எனினும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ரோஹண திஸாநாயக்க , எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், ஹேஷா வித்தானகே, சந்திம விஜேசிறி, மனுஷ நாணயக்கார, றோஹினி கவிரத்ன உள்ளிட்ட பலர் இதனை புறக்கணித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM