காலாவதியான சிற்றுண்டியை மீள் பொதியிட்ட தொழிற்சாலைக்கு சீல்

Published By: Digital Desk 3

17 Feb, 2021 | 03:56 PM
image

(எம்.மனோசித்ரா)

பேலியகொட - நுகேபார பிரதேசத்தில் உணவு உற்பத்தி தொழிற்சாலையொன்று தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் , வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட காலாவதியான 'ஜம்போ பீனட்ஸ்' எனப்படும் சிற்றுண்டி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவிக்கையில் ,

காலாவதியான திகதியுடன் காணப்பட்ட ஒரு இலட்சத்து 18,000 ஜம்போ பீனட்ஸ் பக்கட்டுக்கள் இதன் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. காலாவதியான அவற்றை பழைய பக்கட்டுக்களிலிருந்து அகற்றி , புதிய பக்கட்டுக்களில் பொதியிட்டுக் கொண்டிருக்கும் போது பொலிஸார் தொழிற்சாலையை சுற்றி வளைத்துள்ளனர்.

தற்போது குறித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிற்றுண்டியின் பெறுமதி சுமார் 3 கோடியாகும். இதற்கு முன்னரும் இதே போன்று காலாவதியான மருந்துகள் , உலர் உணவுகள் உள்ளிட்டவற்றை திகதியை மாற்றி மீள் பொதி செய்து வியாபாரம் செய்பவர்கள் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

இது மனிதாபிமானத்தை மீறி செய்யப்படும் குற்றமாக கருதப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் பொது மக்கள் வெவ்வேறு உடல்நல சுகாதார பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்கின்றனர். எனவே இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50