(எம்.மனோசித்ரா)
இலங்கை அரசியலில் பாரதீய ஜனதா கட்சி செல்வாக்கு செலுத்த உள்ளதாக வெளியான தகவல்கள் உத்தியோகப்பூர்வமானதாக கருத முடியாது.
எனவே உத்தியோகப்பூர்வமற்ற அந்த விடயம் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்தது.
ஆனால் இவ்வாறு கண்டுக்கொள்ளாமலிருந்து விட்டால் ஒரு நாள் பாரதீய ஜனதா கட்சி இலங்கையில் ஆளும் கட்சியாகுவதோடு தற்போதைய ஆளும் கட்சி எதிர்க்கட்சியாகும் நிலை ஏற்படுமென அமைச்சரவை இணை பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர் .
பாரதீய ஜனதா கட்சியின் செயற்பாடுகளை இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் ஆரம்பித்து அதிகாரத்தை அடைவது குறித்து இந்திய - திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளிளியட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதன் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில கூறுகையில் ,
கேள்வி : இலங்கை மற்றும் நேபாளத்தில் பாரதீய ஜனதா கட்சியை ஸ்தாபிக்கவுள்ளதாக இந்திய திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளை எதிர்பார்த்தா புதிய அரசியலமைப்பின் ஊடாக இரட்டை பிரஜாவுரிமையை கொண்டவர்களுக்கும் இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளித்தீர்கள் ?
பதில் : பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா இவ்வாறானதொரு விடயத்தை கூறியுள்ளமைக்கான உறுதிப்படுத்தப்பட்ட சாட்சி இல்லை. அவர் கூறியதாக திரிபுரா முதல்வர் தான் இந்த கருத்தை கூறியுள்ளார். அமித்ஷா இவ்வாறு கூறியதற்கான காணொளி பதிவோ அல்லது அறிக்கையோ இதுவரையில் ஊடகங்களில் வெளியாகவில்லை. மூன்றாம் நபர் கூறிய அறிவிப்பபே கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் கட்சியொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமானால் தேசப்பற்றுள்ள இலங்கை மக்கள் அதற்கு ஆதரவளிக்க மாட்டார்கள்.
அதே போன்று ஜனாபதி கோத்தாபாய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பில் இரட்டை பிரஜாவுரிமையுடையோருக்கு இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை நீக்குவதாக கடந்த செப்டெம்பர் மாதம் 10 கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். அந்த அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமைவில் நியமிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான குழு தற்போது நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளை சந்தித்து அவற்றின் நிலைப்பாடுகளை சேகரித்து வருகிறது. எனவே ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு ஏற்ப புதிய அரசியலமைப்பை ஒரு வருடத்திற்குள் நிறைவேற்ற முடியும் என்று நம்புகின்றோம்.
கேள்வி : எனினும் பிரபல இந்திய பத்திரிகைகளில் பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் கட்சியை நிறுவும் என்றும் , தேர்தலிலும் போட்டியிடும் என்று செய்திகளை வெளியிட்டுள்ளன. அவ்வாறெனில் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கின்றதல்லவா ? இங்கு காணப்படுவது கிழக்கு முனைய விவகார முரண்பாடுகள் அல்லவா?
பதில் : பா.ஜ.க. தலைவர் இவ்வாறு அறிவித்துள்ளதை நீங்கள் அறிவீர்களா? அமிக்ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் தான் கூறியிருக்கிறார். அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை நிரூபித்தால் அதற்கான பதிலை என்னால் கூற முடியும்.
கேள்வி : ஆனால் திரிபுரா முதல்வரின் அந்த கருத்திற்கு பா.ஜ.க. தலைமைத்தும் எவ்வித நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லையல்லவா? இதன் மூலம் அதிகாரத்துடன் அவர்கள் இந்த கருத்தை கூறியுள்ளதாகவே தோன்றுகிறது. இதே நிலைமை தொடர்ந்து கொண்டிருக்குமாயின் இலங்கையின் நிர்வாக அதிகாரத்தை இந்தியா பெரும் அதே வேளை , இலங்கை அரசாங்கம் எதிர்க்கட்சியாகும் நிலைமையே ஏற்படும்.
பதில் : வாய் வழி பேச்சுக்களுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளையே நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். பிவிதுரு ஹெல உருமயவின் செய்தியாளர் மாநாட்டில் அமர்ந்திருந்தால் இதனை விட சுதந்திரமாக எனது கருத்தை முன்வைத்திருப்பேன். ஆனால் இங்கு நான் அரசாங்கத்தின் பேச்சாளராகவே அமர்ந்திருக்கின்றேன். இது மிக முக்கியத்துவமுடைய விடயமென்பதால் வாய் வழி கதைகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்க முடியாது.
கேள்வி : உண்மையில் அவ்வாறு நடந்தால் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில் : அவ்வாறு நடந்தால் அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM