(செ.தேன்மொழி)
நுகேகொட பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் விடுதியொன்றின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
நுகேகொட - கங்சபா சந்தியில் அமைந்துள்ள 7 அறைகளைக் கொண்ட விடுதியொன்றில் , இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு திட்டமிட்ட குற்றப்பிரினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களை வைத்திருந்ததாக விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்ட 29 வயதுடைய முகாமையாளரிடமிருந்து , 5 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரை அபாயகர போதைப் பொருள் சட்டவிதிகளின் கீழ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி , ஏழுநாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான உத்தரவை பெற்றுக் கொள்ளவும் திட்டமிட்ட குற்றப்பிரிவினர் எதிர்ப்பார்த்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM