'சாதாரண மக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும்வரை நான் அதனை தவிர்த்து கொள்கின்றேன்': முஜிபுர்

Published By: J.G.Stephan

16 Feb, 2021 | 05:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பொது மக்கள் ஆளாகி இருக்கும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது நியாயமில்லை. அதனால் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும்வரை கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் இருந்து தவிர்ந்துகொள்கின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டா்.

இதுதொடர்பாக  அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸுக்கு அதிகமாக பாதிக்கப்படுவது அன்றாடம் தொழில் செய்து வாழ்ந்துவரும் சாதாரண மக்களாகும். அவர்களுக்கு ஆரம்பமாக கொவிட் தடுப்பூசி ஏற்றப்படவேண்டும். அமைச்சர்கள்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதார பாதுகாப்பை பேணி செயற்பட தேவையான வசதிகள் இருக்கின்றன. ஆனால் இந்த மக்களுக்கு அந்த வசதிகள் இல்லை.

அவ்வாறான நிலையில் மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் ஆரம்பமாக கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது நியாயமில்லை. அரசியல் வாதிகள்  மக்களின் சேவகர்கள் என தேர்தல் காலத்தில் அரசியல் மேடைகளில் பேச்சளவில் தெரிவிப்பதில் பிரயோசனம் இல்லை. அதனை செயலிலும் காட்டவேண்டும். ஒருநாள் தொழில் செய்யாவிட்டால் அந்த குடும்பமே பட்டினியில் இருக்கும் மக்கள் இருக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பமாக தடுப்பூசி ஏற்றிக்கொள்வது எவ்வாறு நியாயமாகும்.

அதனால் அரசாங்கத்தின் கொவிட் தடுப்பூசியை அன்றாடம் தொழில் செய்யும் மக்கள் மற்றும் அரச சேவையாளர்களுக்கு ஏற்றிய பின்னர் அந்த தடுப்பூசியை ஏற்றிக்கொள்வேன். அதுவரை கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் இருந்து தவிர்ந்து கொள்வேன் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:41:32
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01