முஸ்லிம் சட்டத்தால் மனித உரிமை மீறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த முடியும் - அத்துரலிய

Published By: Digital Desk 4

15 Feb, 2021 | 10:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பெரும்பான்மையின மக்களினால் தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நீதியமைச்சர் அலி சப்ரி செயற்பட வேண்டும்.

முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கருத்து தெரிவிப்பதை அவர் தவிரத்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

முஸ்லிம் விவாக சட்டத்தை மேல் நாட்டு சட்டம், தேசவழமை சட்டம் ஆகிய பாரம்பரிய சட்டங்களுடன் ஒப்பிட முடியாது.

பௌத்த சாசனத்தை பாதுகாக்கவும், பௌத்த உரிமை பாதுகாக்கவும் இயற்றப்பட்ட சட்டங்களை நீக்க பௌத்த மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.

முஸ்லிம் சட்டத்தினால் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பதை  உறுதிப்படுத்த முடியும். இவ்விடயம் குறித்து நீதியமைச்சர் எம்முடன் நேரடியான பகிரங்க விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முஸ்லிம் விவாக சட்டம் குறித்து அண்மையில் பாராளுமன்றில் உரையாற்றினேன். இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் விவாக சட்டம் குறித்து கருத்துரைக்கவில்லை.

மனித உரிமை கோட்பாட்டை முழுமையாக செயற்படுத்தும் போது மத காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க கூடாது. நான் குறிப்பிட்ட கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளை ஆகியோர் ஏற்றுக் கொண்டார்கள்.

நான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அலி சப்ரி நீதியமைச்சராக இருந்து பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவர் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அமைச்சராக இருந்து பதிலளித்துள்ளமை கவலைக்குரியது.

முஸ்லிம் சமூகத்தின் மத்தியின் காணப்படும் தவறுகளை இவர் திருத்துவார் என எதிர்பார்த்தேன் ஆனார் இவரது செயற்பாடுகள் எதிர்பார்ப்புக்களை தோற்கடித்துள்ளது.

முஸ்லிம் விவாகசட்டத்தை நீக்க வேண்டுமாயின் கண்டி சட்டம், தேசவழமை சட்டம்,மேல்நாட்டு ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று நீதியமைச்சர் குறிப்பிட்ட கருத்தின் நோக்கம் நன்கு புலப்படுகிறது.

இச்சட்டங்களினால் மனித உரிமைகள் மீறப்படவில்லை.இவை நாட்டின் பொதுச்சட்டத்திற்கு  உட்பட்டதாக உள்ளது.ஆனால் முஸ்லிம் விவாக சட்டம் காதி நீதிமன்றத்தினால் செயற்படுத்தப்படுகிறது. இது ஒரு நாடு- ஒரு சட்டம் என்றகொள்கைக்கு முற்றிலும் முரணானது.

காதி நீதிமன்றினால் முஸ்லிம் பெண்களும், ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. ஆனால் தேசவழமை சட்டம், மேல்நாட்டு சட்டத்தினால் எவரும் பாதிக்கப்படவில்லை.

மகாசங்கத்தினருக்கு  பிரத்தியேகமாக நீதிமன்றம் ஏதும் உருவாக்கப்படவில்லை என்பதை நீதியமைச்சர் தெரிந்த்துக் கொள் ள வேண்டும்.ஆகவே முஸ்லிம் விவாக சட்டத்தை பௌத்த சாசனத்தையும், பௌத்த உரிமைகளையும் பாதுகாக்க உருவாக்கிய சட்டங்களுடன் ஒப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் அமைச்சர் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி  பொறுப்பான நீதியமைச்சர் என்ற அடிப்படையில் நீதியமைச்சர் அலி சப்ரி செயற்பட வேண்டும். இவ்விடயம் குறித்து பகிரங்க விவாதத்திற்கு  அழைக்கிறேன்.அனைத்து காரணிகளையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.

முஸ்லிம் விவாக சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதில் ஏனைய சட்டங்களை சார்பாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11